பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஈவது விலக்கேல்


தொழுது நிற்கும் ஒருவன்உறு
துன்பம் கண்டு மனமிரங்கிப்
பழுதில் லாத அன்புடனே
பரிந்து களைதல் நற்பண்பாம்.

தன்னால் உதவ இயலாதேல்
தருமம் செய்யக் கூடியவர்
இன்னார் என்று வழிகாட்டி
இனிதே அனுப்பல் நற்குணமாம்.

அன்பு மிகுந்து கொடுப்பவரை
ஆகா தென்று தடுத்திடலோ
துன்பம் பெருக்கும் செயலாகும்
தூய்மை யற்ற நினைப்பாகும்.

41