இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உடையது விளம்பே'
உள்ள தெல்லாம் பிறர்அறிய
உரைத்தல் மிக்க பேதைமையாம்
கள்ளம் அற்றுப் பேசிடினும்
கருத்தில் மாற்றம் விளைத்திடுமாம்.
இல்லா தவர்.பால் இருப்பதனை .
எடுத்து ரைத்தால் அவர்மனத்தில்
பொல்லா எண்ணம் பலப்பலவாய்ப்
புகுந்து தீமை விளைத்திடலாம்.
இருக்கும் பொருளைப் பிறர்அறிய
எடுத்துச் சொல்லித் துன்பத்தைப்
பெருக்கிக் கொள்ளா திருப்பதையே
பெருக்கி இன்பங் கண்டிடலாம்.
42