பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஊக்கமது கைவிடேல்


நல்ல பயனைத் தருஞ்செயலே
நாளும் செய்து வரவேண்டும்
செல்வம் சேரும் என்றாலும்
சேரா தெனினும் செயவேண்டும்.
இடர்கள் பலவே தோன்றிடினும்
எதிர்த்துப் பலபேர் நின்றிடினும்
தடைகள் பலவே நேர்ந்திடினும்
தளரா ஊக்கம் வேண்டுமடா.
ஊக்கம் உடையான் இறுதியிலே
உறுதி யாக வென்றிடுவான்
ஆக்கம் அடைவான், இன்பமெலாம்
அடைவான் என்றார் சான்றோரே.

4.3