பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எண்ணெழுத் திகழேல்


உலகில் அறிவைப் பெறுதற்கே
உற்ற துணையாய் இருப்பதெலாம்
புலமை மிக்க கிான்றோர்கள்
போற்றும் கல்வித் துறையேயாம்.
.
எழுதப் படிக்கத் தெரிந்தவன் தான்
எதையும் கற்றுக் கொண்டிடலாம்
பழுதில் லாமல் எண்ணுபவன்
பாரில் ஏமாந்தழ வேண்டாம்.

எண்ணத் தெரிந்தால் கணக்குவரும்
எழுதத் தெரிந்தால் படிப்புவரும்
எண்ணை எழுத்தை இகழாதே
ஏற்றுப் படிப்பாய் கண்ணே நீ.