பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வாசல் தோறும் கைநீட்டி
வயிறு வளர்க்கும் ஏழைக்குப்
பாசத் தோடு சோறிடுதல்
பண்பு நல்ல பண்பாகும்.

வயிறு வளர்க்க நமைநாடி
வாழ்த்துப் பாடி வருவோரின்
துயரந் தீர்க்கச் சோறிடுதல்
தூய அறமே அதைப்புரிவாய்.

பிறந்தோ ரெல்லாம் வாழ்ந்திடவே
பெரிய வையம் உண்டென்னும்
அறந்தான் உள்ளம் கொண்டிடுவாய்
ஐயம் இட்டுச் சோறுண்பாய்.