பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்புர(வு) ஒழுகு

ஒருவர்க் கொருவர் துணைசெய்தே
ஒற்று மையாய் வாழ்ந்திடலே
பெருவை யத்தின் நெறியாகும்
பெரியோர் போற்றும் ஒப்புரவாம்.

ஒன்றாய்ப் பழகு வோர்க்கெல்லாம்
உதவி செய்தல் கடனாகும்
நன்றாய் அவர்தம் நட்புறவை
நாளும் வளர்த்தல் நலமாகும்.

சான்றோர் போற்றும் ஒப்புரவாம்
தரும நெறியை மேற்கொண்டே
ஈன்றோர் மகிழ இவ்வுலகில்
இன்ப வாழ்வு நடத்திடுவாய்.