பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவியம் பேசெல்

 

மகிழ்வாய் வாழ்வோர் தமைக்கண்டு
மனம்பொ றாமல் பேசாதே.
இகழ்வாய்ப் பேசி அவர்பகையை
ஏற்றுக் கொண்டு நிற்காதே.


உயர்வாய் வாழ்வோர் தமைக்கண்டே
உளம்பொ றாமல் பேசாதே.
முயல்வாய் நீயும் அவர்போலே
முன்னே றிடவே வழிபாராய்.


முயற்சி யுடையார் வாழ்வினிலே
முழுதும் இன்பம் கண்டிடுவார்
உயர்ச்சி யடைவார் எனுமிந்த
உண்மை யறிவாய் நலங்காண்பாய்.

49


7