பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

அஃகஞ் சுருக்கேல்

கடையில் வைத்துத் தானியங்கள்
காசு பெற்று விற்பவனும்::
எடையில் படியில் குறைசெய்தே
ஏமாற் றுவது தீதாகும்.

பாலில் தண்ணிர் கலப்பதுபோல்
பருக்கைக் கல்லை அரிசியிலே
நாலுக் கொன்றாய்க் கலப்பவனும்
நல்லோ னாக இருப்பானோ?

ஊரா ரெல்லாம் பழித்தேசும்
ஒருவன் வாழ்வும் வாழ்வாமோ?
யாரேனும்மிவ் வாழ்வுதனை
அடைய விரும்பு வாருண்டோ?