பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

 

பிள்ளை வேண்டும் வேண்டுமெனப்
பெரிதும் நல்ல தவமிருந்தே
உள்ளம் மகிழப் பெற்றோர்கள்
உண்மை நமது பெற்றோரே.

ஊறும் அன்பால் நாள்தோறும்
ஊட்டி வளர்த்து நலஞ்சேர்ப்பார்
வேறு தெய்வம் இவர்போலே
விரும்பி நம்மைக் காத்திடுமோ?

கண்ணின் இமைபோல் நமைக்காப்பார்
கைமா றெதுவும் கருதாரே
எண்ணில் இனிய தெய்வமிவர்
எதிரில் தோன்றும் தெய்வமிவர்.

52