பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆலயம் தொழுவது சாலவும் நன்று



கடலும் மலையும் உலகெல்லாம்
காணும் பொருள்கள் அவையெல்லாம்
உடலும் உயிரும் அறிவெல்லாம்
உண்டாக் கியவன் இறைவனடா.

எல்லா இடமும் அவனிடமே
எல்லாப் பொருளும் அவன் பொருளே
எல்லாப் பொழுதும் அவன்பொழுதே
இதனை நீநன் குணர்ந்திடுவாய்.

ஆல யம்போய் நாள்தோறும் -
அவனைப் போற்றித் தொழுவதனால்
சீலம் பெருகும். நன்மையெலாம்
சேரும் என்றார் சான்றோரே.