பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இல்லற மல்லது நல்லற மன்று

பெரியவ ரான பின்னாலே
பெண்ணும் ஆணும் ஒன்றாகித்
திருமணம் செய்து கொண்டினிது
சேர்ந்து வாழ்வது இல்லறமாம்.

இல்லற வாழ்வால் குடிவழியே
இனிது தழைக்கும் என்பதனால்
நல்லற மென்றே பெரியோர்கள்
நவின்றார் அச்சொல் போற்றிடுவாய்.

துறவு பூண்டு வாழ்வதுவே
தூய வாழ்வென் பார்சிலரே
அறமன் றென்றே நல்லறிஞர்
அதனை ஒதுக்கி விட்டாரே.