பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு

அளவாய் உண்ண வேண்டுமென
     ஒளவைப் பாட்டி சொல்லியசொல்
இளம்பெண் கட்கும் ஆடவர்க்கும்
    இருபா லார்க்கும் தகுஞ்சொல்லே.

மிகுந்த உணவால் செரிமான்ம்
    மெதுவாய் நடக்கும்; சோம்பல்மிகும்
புகுந்து நோய்கள் உடலினிலே
     பொறுக்க முடியாத் துன்பியற்றும்.

வாயைக் கட்டி வாழ்வோர்க்கே
வயிறு நன்றாய் இருந்திடுமாம்
தூய உடலும் நல்வாழ்வும்
சுறுசுறுப்பும் உண்டாமே!

56