பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்


<poem> காசு மிகவைத் திருந்தாலும்

கல்வி மிகக்கற் றிருந்தாலும்

நேசம் ஊரார் பாலின்றேல்

நிலைகெட் டழிய நேர்ந்திடுமே.


பழக்க வழக்கம் மாறிடினும்

பண்பில் லாது நடந்திடினும்

இழக்க நேரும் அவரன்பை

இயைந்து வாழ்தல் நன்றாகும்.


ஊரா ரெல்லாம் போற்றிடவே

உகந்த முறையில் நடந்திடுவோன்

சீராய் வாழ்வான் நலங்காண்பான்

சிறப்பு மிகப்பெற் றின்புறுவான்.
8
57