இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
<poem>
காசு மிகவைத் திருந்தாலும்
- கல்வி மிகக்கற் றிருந்தாலும்
நேசம் ஊரார் பாலின்றேல்
- நிலைகெட் டழிய நேர்ந்திடுமே.
பழக்க வழக்கம் மாறிடினும்
- பண்பில் லாது நடந்திடினும்
இழக்க நேரும் அவரன்பை
- இயைந்து வாழ்தல் நன்றாகும்.
ஊரா ரெல்லாம் போற்றிடவே
- உகந்த முறையில் நடந்திடுவோன்
சீராய் வாழ்வான் நலங்காண்பான்
- சிறப்பு மிகப்பெற் றின்புறுவான்.
8
57