பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஏவாமக்கள் மூவா மருந்து

 

ஒருவர் சொல்லும் குறிப்பைத்தான்
உடனே அறிந்து செயலாற்றல்
பெருமை தருமோர் திறனாகும்
பேணி வளர்க்கத் திருவாகும்.

தந்தை வேலை ஏவுமுனம்
தானே முடித்துத் தரும்பிள்ளை.
சிந்தை களிக்கச் செயப்பிறந்த
தெய்வ மருந்துக் கொப்பாவான்.

ஏவிச் செய்வார் நன்மக்கள்
என்றும் செய்யார் கீழ்மக்கள்
ஏவா முன்னம் குறிப்பறிந்தே
இயற்று வோரே பொன்மக்கள்!

59