பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒருவனைப் பற்றி ஓரகத் திரு

 

தூய குணங்கள் உடையவனைத்
துணையாய்ப் பெறுதல் சிறப்பாகும்
ஆய இன்பம் அத்தனையும்
அவனால் அடையப் பெறலாகும்

நாட்டில் உள்ள நலமெல்லாம்
நல்லோன் ஒருவன் துணைவந்தால்
வீட்டில் வந்து சேர்ந்துவிடும்
வெள்ள இன்பம் தேங்கிவிடும்.

குடி யிருக்கும் ஓரிடமும்
கூடுந் துணையும் நன்றானால்
விடியும் பொழுதும் இன்பந்தான்
விளையும் பயனும் இன்பந்தான்!

61