பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓதலின் நன்றே வேதியர்க் கொழுக்கம்

அறநூல் பலவே ஆய்ந்திடலாம்

அவற்றின் நுட்பம் தேர்ந்திடலாம்

பிறரும் அறியக் கூறிடலாம்

பிறழா மல்தான் இருந்திடினே.

ஊருக் கெல்லாம் அறங்கூறி

ஒழுக்கம் தான்கைக் கொள்ளாதோன்

பாரில் அற்பப் பதராவான்

படித்த தெல்லாம் வீணாமே!

ஒழுக்கம் தவறா வாழ்வுதனை

உடையான் உலகைத் தன்வழியில்

இழுக்கும் ஆற்றல் பெற்றிடுவான்

இணையில் தலைவன் ஆகிடுவான்.