இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஓதலின் நன்றே வேதியர்க் கொழுக்கம்
அறநூல் பலவே ஆய்ந்திடலாம்
- அவற்றின் நுட்பம் தேர்ந்திடலாம்
பிறரும் அறியக் கூறிடலாம்
- பிறழா மல்தான் இருந்திடினே.
ஊருக் கெல்லாம் அறங்கூறி
- ஒழுக்கம் தான்கைக் கொள்ளாதோன்
பாரில் அற்பப் பதராவான்
- படித்த தெல்லாம் வீணாமே!
ஒழுக்கம் தவறா வாழ்வுதனை
- உடையான் உலகைத் தன்வழியில்
இழுக்கும் ஆற்றல் பெற்றிடுவான்
- இணையில் தலைவன் ஆகிடுவான்.