இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
<poem>
ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற் கழிவு
உலக மக்கள் எல்லோரும்
- உயர்ந்த வாழ்வு பெற்றின்ப
நலங்கள் எய்த வேண்டுமென
- நாடி உழைத்தல் அறிவாகும்.
வாழும் ஒருவன் நிலைகண்டு
- வாடிப் புழுங்கிப் பேசுவது
தாழும் அறிவாம்: தன்நிலையைத்
- தானே தாழ்த்திக் கொள்ளுவதாம்.
ஆக்கம் மிக்கார் போல்தானும்
- அனைத்து நலமும் பெறவேண்டின்
ஊக்கத் தோடே எந்நாளும் - - -
- உழைத்து.முயன்றால் உயர்வுண்டாம்.
<poem> 63