பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஃகமும் காசும் சிக்கெனத் தேடு

சேருங் காலம் சேர்த்தால்தான்
தேவை யுள்ள காலத்தே
யாரும் உதவா விட்டாலும்
அனுபவித்துக் கொளலாகும்.

உரிய பருவம் தேடாமல்
உறங்கிக் கிடந்து விட்டாற்பின்
பெரிய தேவை வரும்போது
பேத் லிக்க நேருமே.

பருவ மறிந்து தானியமும்
பணமும் தேடிக் கொண்டாற்பின்
வருவா யற்ற காலத்தே
வாட்ட மின்றி வாழ்ந்திடலாம்!

64