பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14


3. மணமக்கள் வாழ்க்கை

தனி வாழ்க்கை

கண்ணகிக்கும் கோவலனுக்கும் திருமணம் நடந்த பின்னர், அவர்கள் இருவரும் தனியே வாழ்க்கை நடத்த விடப்பட்டனர். அவர்கட்காகத் தனி மாளிகை ஒன்று விடப்பட்டது. கண்ணகிக்கு உதவியாகப் பணிப் பெண்கள் பலர் அமர்த்தப்பட்டனர். மணமான பிறகு இவ்வாறு மணமக்களைத் தனி வாழ்க்கை நடத்த விடுதலே பண்டைப் பழக்கமாகும். இப்பழக்கமே இன்று மேனாட்டாரிடம் மிகுந்து காணப்படுகின்றது.

இன்ப மாளிகை

மணமக்கள் தங்கி இருந்த விடுதி மிக்க அழ கானது; இரண்டு அடுக்கு மாடி வீடாகும். மூன்றாம் தளம் திறந்த நிலையில் இருந்தது. அதன்மீது பகற் காலத்தில் வெயிலும் இரவுகாலத்தில் நிலவும் காய்தல் உண்டு. கண்ணகி நிலாக் காலங்களில் தன் தோழியரோடு அத்தளத்தில் இருந்து இன்பமாகப் பொழுது போக்குவாள்; சில சமயங்களில் கோவலனுடன் இருந்து இசைக் கருவிகளை மீட்டி அவனை இன்பப்படுத்துவாள். மாளிகையில் ... எங்குப் பார்ப்பினும் அழகிய ஓவியங்கள காட்சி அளித்தன. வறுமைக்குச் சிறிதும் இடம் கொடாத அம்மாளிகை 'இன்ப மாளிகை'யாக இலங்கியது.