பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

மணிமேகலை

கோவலனுக்கு மகளாகிய மணிமேகலை என்பவள் பெளத்த மதத்தைச் சார்ந்தாள்; அறவண அடிகள் என்ற பெளத்த சமயத்துறவியிடம் அறவுரை பெற்றாள். காஞ்சி பூம்புகார் என்ற நகரங்களில் இருந்து அன்னதானம் செய்தாள், ஜாவா மணிபல்லவம் முதலிய தீவுகட்குச் சென்று மீண்டாள்; பத்தினிக் கடவுள் கோவிலுக்கு வந்து, பத்தினியைத் தரிசித்து ஆசி பெற்றாள்; பல சமயவாதிகளைச் சந்தித்து, அவரவர்கள் சமயக் கொள்கைகளைக் கேட்டறிந்தாள்; இறுதியில் அறவன அடிகள் உபதேசப்படி, தவம் கிடந்து துறக்கம் அடைந்தாள். அவளது பெயரும் புகழும் தமிழ் நாட்டில் நன்கு பரவின.

இரு பெருங் காவியங்கள்

இவ்விரண்டு வரலாறுகளும் நடைபெற்று ஆண்டுகள் சில கழிந்தன. ஒருநாள் வஞ்சி அரண் மனையில் சேரன்-செங்குட்டுவன் முன் சாத்தனார் இளங்கோ அடிகளை நோக்கி, “அடிகளே, கோவலன்-கண்ணகி வரலாற்றை நீவிர் ஒரு காவியமாகப் பாடியருளல் வேண்டும்” என்று வேண்டினர். அடிகள் சாத்தனாரை அன்புடன் நோக்கி, “புலவரே, நீவிர் மணிமேகலை வரலாற்றை ஒரு காவியமாகப் பாடுவதாயின், நான் உமது விருப்பம்போல் ஒரு காவியம் பாடுவேன்” என்றனர் சாத்தனாரும் அதற்கு இசைந்தனர்.

சிலப்பதிகார அரங்கேற்றம்

பல மாதங்கள் கழிந்தன. பின்னர் ஒரு நாள் வஞ்சிமாநகரத்தில் வஞ்சி வேந்தனது