திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 195 ஒடினேன் ஒடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து நாடினேன் நாடி நான்கண்டு கொண்டேன்
நாராய னாவென்னும் நாமம்’ .ன்று தொடங்கி,
"குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுய ராயின வெல்லாம் நிலந்தரஞ் செய்யும் நீள்விசும் பருளும்
அருளொடு பெருநில மளிக்கும் வலம்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும் நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராய னாவென்னும் நாமம்’ . .ன்று தொடர்ந்து,
"மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர்
மங்கையார் வாள்கலி கன்றி செஞ்சொலா லெடுத்த தெய்வநன் மாலை
இவைகொண்டு சிக்கெனத் தொண்டீர் துஞ்சும்போ தழைமின் துயர்வரில் நினைமின்
துயரிலிர் சொல்லினும் நன்றாம் நஞ்சுதான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராய னாவென்னும் நாமம்’ பன்று நாராயண மந்திரத்தையும் அதன் பெருமைகளையும்
டு மக்களுக்கு எடுத்துக் கூறுகிறார்.
திருமங்கையாழ்வார், திருப்பிருதி பதரிகாசிரமம், ளக்கிராமம், நைமிசாரண்யம், சிங்கவேள் குன்றம் அ கோபிலம்), திருவேங்கடம், திருவள்ளுர், திருவல்லிக்கேணி, திருநீர்மலை, திருக்கடல்மல்லை மல்லபுரம்), திருவிட வெந்தை (திருவிடந்தை), அட் டபுய கரம் (சின்னக் காஞ்சிபுரம்), பரமேஸ்வர விண்ணகரம் (பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்டப் பெருமாள் சந்நிதி), திருக்கோவலூர், திருவயிந்திரபுரம், திருச்சித்திரக்கூடம் (சிதம்பரம்), காழிச்சீராம விண்ணகரம் (9ர்காழி), திருவாலி, திருநாங்கூர், திருவைகுந்த விண்ணகரம், திரு அரிமேய விண்ணகரம், திருத்தேவனார் தொகை