166 சிலப்பதிகாரம்
பாடி இருக்கை நீங்கிப் பெயர்ந்து, 175 கங்கைப்பே ரியாற்றுக் கண்னரிற் பெற்ற வங்கப் பரப்பின் வடமருங்கு எய்தி, ஆங்கவர் எதிர்கொள, அந்நாடு கழிந்தாங்கு; ஒங்குநீர் வேலி உத்தரம் மரீஇப் பகைப்புலம் புக்குப் பாசறை இருந்த 180
தகைப்பருந் தானை மறவோன்-தன்முன்
உத்தரன்.விசித்திரன் உருத்திரன், பைரவன், சித்திரண், சிங்கண், தனுத்தரண், சவேதண், வடதிசை மருங்கின் மன்னவர் எல்லாம். தெண் தமிழ் ஆற்றல் காண்குதும் யாமெனக் 185
கலந்த கேண்மையிற் கனக விசயர் நிலந்திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர இரைதேர் வேட்டத்து எழுந்த அரிமாக் கரிமாப் பெருநிரை கண்டுஉளம் சிறந்து
பாய்ந்த பண்பிற். பல்வேல் மன்னர் 190 காஞ்சித் தானையொடு காவலண் மலைப்ப, வெயிற்கதிர் விழுங்கிய துகிற்கொடிப் பந்தர், வடித்தோற் கொடும்பறை, வால்வளை, நெடுவயிர், இடிக்குரல் முரசம், இழுமென் பாண்டில், உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து 195 மயிாக்கண் முரசமொடு, மாதிரம் அதிரச் -
சிலைத்தோல் ஆடவர், செருவேல் தடக்கையா,
கறைத்தோள்,மறவர், கடுந்தேர் ஊருநர் வெண்கோட்டு யானையர் விரையரிக் குதிரையர், மண்கணி கெடுத்தவிம் மாநிலப் பெருந்துகள் 200 களங்கொள் யானைக் கவிழமணி நாவும் விளங்குகொடி நந்தின் வீங்கிசை நாவும் நடுங்குதொழில் ஒழிந்து, ஆங்கு ஒடுங்கி, உள்செறியத்