பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 சிலப்பதிகாரம்

திறனாய்வுக் கட்டுரைகள்

1. கண்ணகி

கண்ணகி இவள் காவியத் தலைவி. மாநாய்கனின் ஒரே மகள். 'ஈகை வான் கொடி அன்னாள்' என்று அறிமுகப் படுத்தப்படுகிறாள். 'ஈகை' என்றால் பொன் என்பது பொருளாகும். இவள் ஒளி பெறுகிறாள். இதுவே காவியத்தின் செய்தியும் ஆகிறது. - -

இவள் வடிவு, திறம் இவை சிறப்பிக்கப்படுகின்றன. திருமகளைப் போன்ற வடிவும், அருந்ததி போன்ற கற்பும் உடையவள் என்று சிறப்பிக்கப் படுகிறாள். மாதரார் தொழுது ஏத்தத் தக்க நற்குணங்கள் நிரம்பியவள் என்றும் கூறப் படுகிறாள்.

& 4

அவளுந்தான் போதில் ஆர் திருவினாள் புகழ்உடை வடிவு என்றும், தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும் மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள்'

இதில் மூன்று செய்திகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இவள் தெய்வத்தோடு உவமிக்கப்படுகின்றாள். மற்றொன்று இவள் கற்பின் திறம்; மூன்றாவது இவள் நற்குணங்கள்; இந்த மூன்றுமே கண்ணகியின் குணச் சித்திரங்கள் என்று கூறலாம்.

இவள் தெய்வம் ஆகிறாள் என்பதற்கு முன் அறிவுப்புகள் காவியத்தில் ஆங்காங்கு இடம் பெறுகின்றன. 'திருவினாள் வடிவு' என்பதே இவள் தெய்வம் என்பதற்குத் தொடக்கமாக அமைகிறது.

வேட்டுவ வரியில் சாலினி என்பாள் 'உலகிற்கு ஓங்கிய

திருமாமணி என்ற தொடரில் இவள் தெய்வம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறாள்.