பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

雞 சிலப்பதிகார விருந்து அப்போது சந்திரன் ரோகிணி 5667 சேரும் நல்லோரை. அம்மங்கல முழுத்தத்தில் அருந்ததி அனேய கற்ப ரசியாம் கண்ணகியைக் கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட் டிடத் தீ வலம் செய்து திருமணம் புரிந்தான். அக்காட்சியைக் காண்பார் கண்கள் செய்த நோன் பென்னே! என்று எண்ணி வையகம்ே வியந்தது. வாசமும் மலரும் உடன் கொண்டு வந்து குழுமிய மகளிர், திருமணச் செல்வர்களே ஒசிந்து நோக்கிப் புகழ்ந்து உரைத்து மங்கலம் பாடினர். ஏந்திய இளந்தனத்தினார்கிய மக ளிர் கையில் சாந்து, புகை, மாலே, சுண்ணம், பாலிகை, கிறைகுடம், விளக்கு, ஆபரணம் முதலியன கொண்டு, முகிழ்த்த புன்முறுவ லுடன் எங்கும் நெருங்கி நின்றனர். வாழ்வர சியராகிய அன்னர், மணமகள் கண்ணகி தன் காதலனே எக்காலும் பிரியாமல், கை கெகி ழாமல், கூடி வாழ்க! தேறுக! நலம் பொங்குக!” என இயம்பி வண்ணமலர் தாவி வாழ்த்தெடுத் தனர். பின்னர்க் காதலர் இருவரையும் மாத ாசியர் மங்கல நல்லமளியிலே-மலர்ப் படுக்கை யிலே-ஏற்றினர். மாலைதாழ் சென்னி வயிரமணித் துனத்து நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ் வான்னர் மதியம் சகடனய வானத்துச் சாலி யொருமீன் தகையாளக் கோவலன் மாமுது பார்ப்பான் மற்ைவழி காட்டிடத் தீவலம் செய்வது காண்ம்ார்கண் நோன்வென்!