பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 சிலப்பதிகார விருந்து தங்கிய இப்பால் இமயத் திருத்திய வாள்வேங்கை உப்பு:லேப் பொற்கோட் டுழையதா எப்பாலும் செருமிகு சினவேற் செம்பியன் ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே.' (மங்கல வாழ்த்து, 64-68) என்று செந்தமிழ் நாட்டுப் பெண் டிர் புது மணம் கொண்ட மணமக்களே வாழ்த்தினர். அவ்வாழ்த்தே ஈண்டு நாம் ஆழ்ந்து கருதி இன் புற வேண்டுவது. பழந்தமிழ் மகளிர் வாழ்த்திய அவ்வாழ்த்து வாயிலாக, நாட்டின் உயிர் காடி வீடே அதுவே அறிவும் வீரமும் அன்பும் பொருந்திய அழகிய உலகை உருவாக்கும் ஒப் பற்ற கிலேயம், என்ற பெருங்கருத்தினை எவ் வாறு தமிழ் நாட்டு மக்கள் பன்னூறு ஆண்டு கட்கு முன்பே உணர்ந்து போற்றினர்கள் என்ற உண்மை மிகத் தெளிவாக விளங்கு கின்றதன்ருே ? ஆம் வீட்டின் வாழ்வும் வெற்றியுமே, காட்டின் வாழ்வும் வெற்றியுமாம், என்பதே சிலப்பதிகாரம் உணர்த்தும் தலையாய தமிழ் நெறி.