பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இந்திர விழாவில் ... ... ...! செல்வச் சிறப்பு வாய்ந்த தமிழ்க்குடும்பம் ஒன்றில் நடைபெற்ற திருமணத்தில் தமிழக மங்கையர் நாட்டுப்பற்று நிறைந்த நெஞ்சத் தோடு மணமக்களை வாழ்த்திய வாழ்த்தொலி யைச் சென்ற அத்தியாயத்தில் கேட்டோம். இனிச் சிலப்பதிகாரக் காலத் தமிழகத்தில் நடைபெற்ற தேசியப்பெருந்திருவிழாவாகிய இந்திர விழாவில் பழந்தமிழ் வீரர் பலர் எல்லே மீறிய நாட்டுப்பற்றின் மிகுதியால் தமது இன் லுயிரையும் துரும்பென மதித்துப் புரிந்த மெய் சிலிர்ப்பிக்கும் காட்சிகளைக் காண்போம்: பூம்புகார் நகரம் பழந்தமிழகத்தின் தல்ை சிறந்த பெருநகராய் விளங்கியது. காவிரியாறு கடலொடு கலக்குமிடத்தே தலை நிமிர்ந்து எழுந்து நின்ற இத்திருநகரம், முழங்கு கடல்