பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఢీళీ சிலப்பதிகார விருந்து ஆற்றிடையே பள்ளி கொண்ட கிடந்த வண்ணத்தாகிைய திரு அமர் மார்பனும், மலே யுச்சியில் கோயில் கொண்ட நின்ற வண்ணத் தானுகிய நெடுமாலும் ஆகிய அருள் சான்ற தெய்வங்களே-அவர் உறையும் தமிழ் நாட்டுத் திருப்பதிகளைக்-காணக் குடம்லே மாங்காட்டு அந்தணன் உள்ளம் துடித்ததாமே! தென்ன வன் நாட்டுச் சிறப்பும் செய்கையும் கண்டு அ வ ன் கண் மணிகள் குளிர்ந்தனவாமே! எல்லாவற்றிற்கும் மேலாகப் பஃறுளியாற்று டன் பன்மலை அடுக்கத்தையும் அழித்துக் கொள்ளே கொண்ட கடலேக் கொடுங்கடல் என்று எவ்வளவு ஆத்திரத்தோடு குறிப்பிடு கிருன் அம்மாங்காட்டு (D6ುறயோன் தீத்திறம் புரிந்தோன'கிய அவனுக்கே பழந்தமிழ் நாட் டின் தென்பகுதியைக் கொள்ளை கொண்ட இயற்கையின்மீது-அலே மோதும் கடல்மீதுஅவ்வளவு ஆத்திரம்-சீற்றம்-இருக்குமானல், இளங்கே அடிகளைப் போன்ற நாட்டுப்பற்றே வடிவெடுத்த நற்றமிழ்ச் சான்றேர் உள்ளத்து உறைந்திருந்த நாட்டுப் பற்ரும் நல்லுணர்ச்சி யைப்பற்றிக் கூறவும் வேண்டுமா! 'பஃறுளி யாற்றுடின் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங்கொடுங்கடல் கொள்ள ’ என்று கூறும் மாங்காட்டு மாமறையோன் சொற்களைப் படிக்கும் போது, தமிழ் நாட்டின் எல்லே குறுகுவதை-கிலப்பரப்பு அழிவதைஒரு சிறிதும் பொறுக்க இசையாத நாட்டுப்பற்