பக்கம்:சிலம்பின் கதை.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சிக் காதை

149



ஆகும். வாழ்க்கை சிறந்த குறிக்கோள் கொண்டது. அத்தகைய குறிக்கோள் அற்றவர் வாழ்ந்து என்ன பயன்? முதியவர்கள் பலர் மண்ணில் மறைந்துவிட்டனர். அவர்கள் உணர்த்துவது யாது? வாழ்க்கை நிலையற்றது என்பது அறியத்தக்கது ஆகும்; அந் நிலையாமை அறத்தை நூல்கள் காட்டத் தேவை இல்லை. என் வாள் அவர்களுக்குக் காட்டும்; வாழ்க்கை நிலையற்றது என்பதை அவர்கள் உணர்வார்கள்.”

“அவர்களை உணர வைப்பது உறுதி; மகளை மறுத்தவன் இமய அரசன் பார்வதி அவளைப் பரமசிவன் வீரம் காட்டி மணந்தான். அவனைப் பணிய வைத்தான்; அது மகட்பால் காஞ்சி என்பர் மற்றும் எம்முன்னவர் இமயம் சென்று விற்கொடியைப் பொறித்த நாள் எதிர்த்த மன்னர் எரி சாம்பல் ஆயினர்; இது வரலாறு கற்பித்த பாடம் ஆகும். காஞ்சித் திணையை அவர்கள் உணர்ந்தனர். ஒழிந்தோர் மற்றவர்க்குக் காட்டிய பொதுக்காஞ்சி, மகட் பால் காஞ்சி, நீள்மொழிக் காஞ்சி ஆகிய இம்மூன்று காஞ்சிகளையும் காண நேரிடும்.

“பகைவர்கள் காஞ்சி காண்பர்; யாம் வஞ்சி சூடுவோம்” என்று சேரன் வஞ்சினம் மொழிந்தான். வஞ்சித் துறைகளுள் வெற்றிச் சிறப்பைக் கூறவது 'நெடுமாராய வஞ்சி'; வெற்றி கொண்ட பிறகு பகைவர் நாட்டைக் கொளுத்தி, அழித்தல் 'வென்றோர் வஞ்சி' எனப்பட்டது. வீரர்க்குச் சோறு தருவது 'பெருஞ்சோற்று வஞ்சி'; பகைவர் நாடு அழிவதற்கு மனம் அழிவது 'கொற்ற வள்ளை'; இவற்றைத் தான் விளைவிப்பதாகக் கூறினான். பனை மாலை அவனுக்கு உரிய சிறப்பு மாலை; “அதனையும், வஞ்சி மாலையும் சூடிக் கொண்டு போர் தொடுப்போம்” என்று வஞ்சி நாட்டு அரசன் சேரன் செங்குட்டுவன் கூறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/150&oldid=936470" இலிருந்து மீள்விக்கப்பட்டது