பக்கம்:சிலம்பின் கதை.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

சிலம்பின் கதை



வழியில் சந்தித்த மாங்காட்டு மறையோன், கோசிக மாணி, மாடலன் இம்மூவரும் காவியத்தில் சிறப்பிடம் பெறுகின்றனர். மாங்காட்டு மறையோன் திருமாலிடம் ஈடுபாடு கொண்டவன். திருவரங்கத்துக்கும், வேங்கடத் துக்கும் செல்லும் வேட்கையனாக விளங்குகிறான். மதுரை செல்லும் வழிகளைக் கூறுகிறான். இட்டசித்திகள் பெறும் வழிவகைகளைக் கூறுகிறான். அவன் குறுக்கு வழியில் எதையும் சாதிக்கலாம் என்ற கருத்தைக் கூறக் கவுந்தி அடிகள் மறுத்து உரைக்கிறார். “உழைப்பே உயர்வு தரும்: நல்வினைகள் ஆக்கம் தரும்” என்ற கருத்துகளை அவனுக்கு அறிவிக்கிறார். இங்கே மாங்காட்டு மறையவளைக் கொண்டு இரு வேறுபட்ட தத்துவங்களைப் பேச வாய்ப்பு அமைக்கிறார் கவிஞர்.

கோசிகமாணி மாதவியிடமிருந்து கடிதம் கொண்டு வருகிறான்; புகார் நகரத்துச் செய்திகளைக் கோவலனிடம் பகர்கின்றான். கோவலனைப் பற்றிய செய்திகளைக் கொண்டு சென்று அவன் பெற்றோர்களிடம் சேர்ப்பிக் கிறான். கோவலனைத் திருத்துகிறான். மாதவி தீதிலள்” என்பதை அறிய வைக்கிறான். தன் தீமையை உணர வைக்கிறான். அவன் கோவலனுக்கு ஊர்ச் செய்திகளை உரைத்து ஆறுதல் தருகிறான். வருந்திய மாதவிக்கு ஆறுதல் சொல்லி அவள் தந்த கடிதம் எடுத்துச் சென்று அவளுக்கு மன நிறைவை உண்டாக்குகிறான்.

அடுத்தது மாடலன், இவன் எல்லாம் அறிந்தவனாக இருக்கிறான். கோவலன் மாதவியோடு இருந்த காலத்து நிகழ்ச்சிகளை வாசகர்கள் அறிய அவற்றைப் பேசுகிறான். ஆறுதல் கூறி அகல்கிறான். கண்ணகி மறைவு பற்றிய செய்தியைப் புகார் நகரில் பெற்றோருக்கும் மற்றோருக்கும் எட்டச் செய்கிறான். வடநாடு சென்று கங்கையில் நீராடச் செல்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/211&oldid=936533" இலிருந்து மீள்விக்கப்பட்டது