பக்கம்:சிலம்பின் கதை.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிநலன்கள்

215



முரண்தொடை நயம்

ஆசிரியர் செய்திகளை முரண்தொடை நயம் தோன்றக் கூறுவதைப் பல இடங்களில் காண்கின்றோம்.

மாதவியை அடைந்து அவளை விட்டுப் பிரியாமல் கோவலன் அங்கேயே தங்கிவிடுகிறான்.

“விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்
வடுநீங்கு சிறப்பின் மனைஅகம் மறந்து”

என்று கூறுவார் இரண்டு முரண்பட்ட செய்திகளை ஒரே இடத்தில் வைத்து முரண்தொடை நயம் தோற்றுவித்தலைக் காண்கிறோம்.

அந்திமாலைச் சிறப்புச் செய் காதையில் பிரிந்த நிலையில் மகளிர் துயரத்தையும், கூடிய நிலையில் அவர்கள் மகிழ்வு நிலையையும் அடுத்து அடுத்து வைக்கக் காண்கிறோம்.

சிறப்பாக மாதவி கண்ணகி இவர்களை மாறுபட்ட நிலைகளில் சித்திரித்துக் கூறுகிறார்.

“நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவியும் புலவியும் காதலற்கு அளித்து ஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக்
கோலம் கொண்ட மாதவி”.

இது மாதவியின் மகிழ்வு நிலை.

“அம்செஞ் சீறடி அணி சிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிது அணி மகிழாள்
கொடுங்குழை துறந்து வடிந்து வீழ் காதினள்
திங்கள் வாள்முகம் சிறுவியர் பிரியச்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/216&oldid=936539" இலிருந்து மீள்விக்கப்பட்டது