பக்கம்:சிலம்பின் கதை.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8. மாதவி எழுதிய முடங்கல்
(வேனிற் காதை)

இளவேனில் பருவம்

இளவேனில் பருவம் தொடர்ந்தது. தமிழகம் எங்கும் ஆட்சி செய்யும் காமவேள் ஆகிய மாரன் அவனுக்குத் துணையாக இனிய இளவேனில் பருவம் வந்தது. தென்றலும் வீசத் தொடங்கியது; குயில் கூவியது; மகளிரின் மனக் கிளர்ச்சியை இப்பருவம் எழுப்பியது.

மாதவிபால் கோவலன் கொண்ட ஊடல் அவளைப் பெரிதும் தாக்கியது; அவள் தனிமை அவளை வாட்டியது. தன் மனையகத்தில் அவள் வேனிற் பள்ளியாகிய நிலா முற்றத்திற்குச் சென்று அங்குத் தனிமையில் யாழ் வாசிக்கத் தொடங்கினாள். வாய்விட்டும் பாடினாள்; அவளால் அந்த இசையில் ஈடுபட முடியவில்லை; இசையில் அவள் மனம் நாடவில்லை.

மாதவி முடங்கல்

கோவலனின் நினைவு அவளை வாட்டத் தொடங் கியது. அவள் தன் கையகத்து இருந்த பூ மாலையை எடுத்தாள். அதில் பல்வகை மலர்கள் இருந்தன. அவற்றுள் தாழை மடலைத் தனித்து எடுத்தாள். பித்திகை முகையை எழுத்தாணியாகக் கொண்டாள். செம்பஞ்சுக் குழம்பு அதனை மையாகக் கொண்டாள்.

“இளவேனில் பருவம் ஆகிய இளவரசன் உயிர்களுக்கு மகிழ்வு ஊட்டுபவன்; அதோடு மாலைப்பொழுதில் தோன்றும் வானத்துத் திங்கள் கொடியது; தம் தலைவரைப் பிரிந்த மகளிரை வாட்டுவது மன்மதன் செயலாகும். இதனை யான் உணர்த்தத் தேவை இல்லை; இதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/49&oldid=963750" இலிருந்து மீள்விக்கப்பட்டது