12
“ நீர் எப்படிச் சோதிடம் பார்ப்பீர்? பிறந்த நாள், பொழுது முதலியவற்றைச் சொன்னால் சாதகம் கணித்துப் பார்த்துப் பலன் சொல்வீரா? கை இரேகைகளைப் பார்த்துச் சொல்வீரா?’ என்று மன்னன் கேட்டான்.
“அவற்றையும் பார்ப்பேன். அவற்றைப் பாராமலே உடற்கூற்றைப் பார்த்தே பலன் சொல்வேன்” என்றார் சோதிடர்.
“என்ன என்ன பொருளைச் சொல்வீர்?” என்று கேட்டான் அரசன்.
சோதிடர்: எதைக் கேட்டாலும் சொல்வேன். பிள்ளைகள் இத்தனை என்று சொல்வேன்; மனைவிமார் இத்தனை பேர் என்று சொல்வேன். போனதையும் சொல்வேன்; வருவதையும் சொல்வேன்.
அரசன்: ஒருவருக்கு இத்தனை ஆயுள் என்று வரையறையாகச் சொல்வது அரிது என்கிறார்களே! நீர் திட்டமாகச் சொல்வீரா?
சோதிடர்: ஓ! உறுதியாகச் சொல்வேன்.
அரசன் : அப்படியானால் என்னைப் பார்த்து ஏதாவது சொல்லும்; பார்க்கலாம்.
சோதிடர்: அரசனை அடிமுதல் முடிவரையில் நோக்கினர். அங்கே இருந்த அத்தனை பேரும் அவர் என்ன சொல்லப்போகிறாரோ என்ற ஆவலுடன் அவர் வாயையே பார்த்துக்கொண்டிருந்தனர். அரசனை நன்றாகப் பார்த்த சோதிடர், “மன்னர் பெருமானுக்கு எதைப்பற்றிச் சொல்ல வேண்டும்?” என்றார்.