பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

அரசன் : இன்னும் எத்தனை காலம் நான் இவ்வுலகில் வாழ்வேன்?

இந்தக் கேள்வியைக் கேட்டதும் அருகில் இருந்த அமைச்சர் முதலியவர்களுக் கெல்லாம் வயிறு பகீரென்றது. சோதிடர் சிறிது தயங்கினார்.

அரசன்: சிறிதும் கவலைப்படாமல் சொல்லும். என்றைக்காவது ஒரு நாள் நான் உலகத்திலிருந்து விடைபெற வேண்டியவன்தானே? ஆகையால், இன்னும் எவ்வளவு ஆண்டுகள் இருப்பேன் என்பதைச் சொன்னால் தெரிந்து கொள்கிறேன். நீர் ஒளிக்காமல் உண்மையைச் சொல்ல வேண்டும். என் சாவு அணிமையில் இருக்குமானால் அதைச் சிறிதும் அஞ்சாமல் சொல்லும். உண்மை எதுவானாலும் கேட்கச் சித்தனாக இருக்கிறேன்.

சோதிடர்: மன்னர்பிரான் திருவுள்ளப்படியே சொல்வதில் தடை இல்லை. ஆனால் அதைத் தெரிந்து கொண்டு மன்னர் பெருமான் செய்யப் போவது ஒன்றும் இல்லையே!

அரசன்: எத்தனையோ இருக்கின்றன. போகும் இடத்துக்கு ஏற்ற துணையைத் தேடிக்கொள்ள வேண்டாமா?

சோதிடர்: மறுபடியும் அரசனுடைய உடம்பு முழுவதையும் உற்றுநோக்கி, “நான் நல்ல செய்தியைச் சொல்லவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். ஆனால் உண்மையைத் தானே சொல்லவேண்டும்?” என்றார்.