பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

பெருவேள்வி மிகச் சிறப்பாக நடைபெற்றது. அடுத்தநாளே வடநாட்டு மன்னர்களை அவர்களுடைய ஊர்களுக்குப் போகும்படி அனுப்பினான். தன் அமைச்சனைக் கொண்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வித்தான். “சிறைக் கோட்டங்களைத் திறந்து குற்றவாளிகளை விடுதலை செய்யுங்கள். வரிகளை வாங்காமல் விட்டுவிடுங்கள்” என்று ஏவினான்.

அப்பால் கண்ணகிக்குக் கோயில் கட்டுவிக்கத் தொடங்கினான். அதற்குரிய விதிகளை அறிந்த பெரியவர்களையும் கலைஞர்களையும் வருவித்தான். கோயிலை அழகாகச் சமைத்தான்.

கோயில் மிகச் சிறப்பான முறையில் கட்டி நிறைவேறியது. இனி அங்கே கண்ணகியின் படிமத்தை நிறுவிக் கடவுள் மங்கலம் செய்யவேண்டும். அதற்குரிய காரியங்களைக் குறைவறச் செய்யும்படி ஏவினான் மன்னன்.