பக்கம்:சிலம்பொலி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சிலம்பொன்

கிழத்தி, அவர்களைத் தனியே குடி அமர்த்தியபோது,

அவ்வாழ்க்கைக்குத் துணைசெய்ய, "வேறுபடு திருவினை” வழங்கினள். வேறுபடு திருவாவது நானா விதமான செல்வம் என்கிறார் அரும்பத உரையாசிரியர். பல படைப்பாகிய செல்வம் என்கிறார் அடியார்க்கு நல்லார்.

அவ்வாறு வேறுபடு திருவினைக் கோவலன் தாய். கொடுப்பதற்கு முன்பே, மங்கல அணியல்லாமல், ஒருகாழ் முத்தம் போலும் பல்வேறு அணிகளை அணிந்திருந்தாள் கண்ணகி. அணிந்துள்ள அணிகளின் பொறை தாங்க மாட்டாது, முகம் முத்து முத்தாக வியர்த்துப் போய் விடும்; இடை பெரிதும் வருந்தித் தளர்ந்து போய்விடும். அந்த அளவான பேரணிகலன்களை அணிந்து கொண். டிருந்தாள். கண்ணகியோடு கோவலன் மகிழ்ந்திருந்த நாளில்தான், கோவலன்தாய், வேறுபடுதிருவினை வழங்கி அவர்களை வேறே குடி அமர்த்தினாள்.

t

"திங்கள் முத்து அரும்பவும், சிறுகுஇடை வருந்தவும்

இங்கிவை அணிந்தனர் என் உற்றனர் கொல்?

உலவாக் கட்டுரை பல பாராட்டித் தயங்கிணர்க் கோதை தன்னொடு தருக்கி வயங்கிணர்த் தாரோன் மகிழ்ந்து செல்வழி நாள் வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி

வேறுபடு திருவின் வீறுபெறக் காண உரிமைச் சுற்றமொடு ஒருதனிப் புனர்க் க’

r : -மனையறம்: 71-88

ன் மனை புகுந்து, கண்ணகியின் வாடிய மேனி தம் கண்ட கோவலன் கூறிய முதற் கூற்றில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/104&oldid=560727" இலிருந்து மீள்விக்கப்பட்டது