பக்கம்:சிலம்பொலி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 சில ம்பொலி

கொற்றவை வாயிலில் பொற்றொடியைத் தகர்த்து விட்டு, வைகையின் ஒரு கரை கொண்டு சேரர் நாடு, அடைந்த போதும், கண்ணகி மேனியில் சிறந்த அணிகள் இருந்ததை,சேரர்கோமான் செங்குட்டுவன்,கண்ணகியை "செயிடுடன் வந்த இச்சேயிழை" (சிலம்பு:25-18) என்ற தொடர் மூலமே குறிப்பிட்டான் எனப் பாடுவதன் மூலம் இளங்கோ அடிகளார் உறுதி செய்துள்ளார். .

கோவலன் பின்னாக, மாதவத்தாட்டி கெளத்தி அடிகளாரோடு ஐயை கோட்டம் அடைந்த கண்ணகியின் காதுகளில் மகரக்குழை கிடந்து ஒளிவிடுவதை, ஆசிரியர் இளங்கோவடிகளார் காண்கிறார். "கோவலன் தன் னொடும் கொடுங்குழ்ை மாதொடும் மாதவத்தாட்டியும் ......ஐயைதன் கோட்டம் அடைந்தனர்” (சிலம்பு:11. 205-216) என்ற தொடர்களைக் காண்க. .

திங்கள் ஒளியில் மூழ்கியவாறே, காட்டு வழியைக் கடந்து செல்லும்போது, தளர்ச்சி போகக் கணவன் தோளைத் தழுவிக்கொள்ளும் போதும், 'நின் கணவன் கள்வனல்லன்! கள்வன் எனச் சொன்ன இவ்வூரை எரி யுண்ணும்" என்ற வெய்யோன் உரை கேட்ட அளவே மாநகர் மன்னனிடம் முறை கேட்க, கையில் சிலம்பு ஏந்தி விரையும்போதும், கொலையுண்டு வீழ்ந்து கிடக்கும் கோவலன் கால்களைத் தொழுது இருகைகளாலும்பற்றிக் கொண்டிருக்கும் நிலையிலும், கண்ணகியின் கைகளிலும் தோள்களிலும், வளைகள் கிடந்து ஒளிவிடும் காட்சியை இளங்கோவடிகளார் தொடர்ந்து கண்டு வந்துள்ளார். 'தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி" (சிலம்பு : 3 : 33); என்றனன் வெய்யோன் இலங்கீர் வளைத் தோளி நின்றிலள்; நின்ற சிலம் 'ான்று கையேந்தி’ (சிலம்பு : 19-1-2); "அழு ங்கி நிலத்தின் வீழ்ந்து ஆயிழை யாள் தன் கணவன் ாழுதகைய திருந்தடியைத் துணை வளைக்கையால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/110&oldid=560733" இலிருந்து மீள்விக்கப்பட்டது