பக்கம்:சிலம்பொலி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் கா. கோவிந்தன் . 109.

நிகழ்ந்திருக்க வேண்டும். அதை உங்கள் மனையகத்தே நிகழ்த்திக் கொண்டீர்கள். மண விழாவினையாவது: எங்கள் மனையில் நிகழ வழி விடுங்கள் என வேண்டும் ஐங்குறுநூற்றுத் தாயின் கூற்றிலும் ('தும்மனைச் சிலம்பு கழிஇ அயரினும், எம்மனை வதுவை நன்மணம் கழிக’ - ஐங்குறு. 399) சிலம்புகழி நோன்பின் சிறப்பு மிளிர்வது. காண்க, -

ஆகவே, சிலம்பு, மணமான மகளிர் அணியப்படா நிலையில், வீட்டில் வீணே இருக்கும் ஒர் அணிகலன்; ஆகவே, தன்பால் வேறு பல அணிகள் இருக்கவும், அவை யெல்லாம் அணியத் தக்கன. ஆகவே, அவற்றுள் எதுவும் தராது. வீணே இருக்கும் சிலம்பினைக் கொடுக்க முன் வந்தாள், கண்ணகி, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/115&oldid=560738" இலிருந்து மீள்விக்கப்பட்டது