114
சிலம்பொலி
கோலம் காணாது ஒழிக எனக் கோதைத் தாமம் குழலொடு களைந்து போதித்தானம் புரிந்து அறங் கொள்ளவும்” (சிலம்பு 27 : 103-108) என மாடலமறையோன் செங்குட்டுவனுக்குக் கூறுவது காண்க.
கோவலன் கொலைக்குக் காரணமான தென்னவனைத் “தீதிலன்” என்று கூறிய கண்ணகி, கோவலன் கொலைக்கு மாதவி பாடிய கானல்வரியே காரணம் என மாதவி குறித்து, உலகோர் கூறும் பழியுரையை மறுத்து அவள் தீதிலள் எனக் கூறவில்லை. ஆகவே, மாதவி குற்றம் உடையவளே என வாதிடுவர் சிலர்.
ஒரு வழக்கில் தொடக்க நிலையில் உண்மைகளை உள்ளவாறு உணர்ந்து கொள்ளாதே, ஒரு தவறான தீர்ப்பினை வழங்கி விட்ட ஒரு நடுவர், பின்னர், உண்மையை உணர்ந்து கொள்ளும் சூழ்நிலை வாய்த்து விட்டதும், தான், முன்பு வழங்கிவிட்ட தவறான தீர்ப்பினை மறுத்து, நல்ல தீர்ப்பு வழங்க வேண்டுவது இன்றியமையாதது. அத்தகைய நிலை, சிலப்பதிகாரப் பாத்திரங்களில் மூவருக்கு ஏற்பட்டு விட்டது.
கானல்வரி பாடுங்கால், கோவலன் உள்ளத்தில் எவ்விதக் குறிப்பும் கொண்டிலன் என்பதும், மாதவி தன் உள்ளம் மகிழவே பாடினான் என்பதும், உண்மையாகவே இருக்கலாம். ஆனால், அவன் பாடிய கானல் வரிகளின் கருப் பொருள், ஒரிளம் பெண்ணின் பால் காதல் கொண்டு கருத்திழந்து நிற்கும் ஒர் இளைஞன் கூற்றாக அமைந்து விட்டது என்பதை மறுக்க இயலாது. அப்பொருள் தொனிக்கப் பாடி விட்ட அவன்,அப்பாடல் கேட்டு, மாதவி தான் பாடிய வரிப் பாடல்களில், ஒரிளைஞன் பால் காதல் கொண்டு கருத்திழந்து நிற்பாளோர் இளம் பெண்ணின் கூற்றையே கருப்பொருளாக ஏற்றிப் பாடி முடித்த நிலை-