18
சிலம்பொலி
எனஅளிக்கும் அடியார்க்கு நல்லாரின் தவறான விளக்கமே ம.பொ.சி. அவர்களை அடி சறுக்க வைத்திருக்க வேண்டும். அடியார்க்கு நல்லார் கூறும் அவ்வுரை விளக்கம், இளங்கோவடிகளாரின் உள்ளம் உணராது கூறிய தவறான விளக்கமே ஆம்.
சிலப்பதிகாரப் பொருளைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு அடியார்க்கு நல்லார் உரையே துணையாகும் என்றாலும், அவ்வுரையும் சிற்சில இடங்களில் தடம் புரண்டு ஓடியுளது என்பதை மறைப்பதற்கில்லை. ம.பொ.சி. அவர்களும் இதை ஒப்புக் கொண்டுள்ளார். “உழையோர் இல்லா ஒரு தனி கண்டு” என்ற தொடருக்கு, “ஆய்ச்சியர் எல்லாம் குரவையாடச் சென்றமை தோன்ற” என்று அடியார்க்கு நல்லார் உரை கூறினார் என்றால், அதனை மூலத்திற்குப் பொருந்தா உரை என்றே கொள்ள வேண்டும்” [பக்கம்: 137] என அவர்கள் கூறியிருப்பது காண்க.
“நீட்டித்து இராது நீ போ” எனக் கௌந்தி அடிகளின் ஆணையிற் கண்ட விரைவினை உணர்ந்த மாதரி, கண்ணகியோடு மனை புகுந்த அடுத்த கணமே, அவர்கள் இருத்தற்கேற்ற இடம் அளிப்பது, கண்ணகிக்கு நீராட்டி விடுவது, தன் மகள் ஐயையைத் துணையாக அளிப்பது, கோவலன் சாவக நோன்பி என்பதறிந்து, நாள் வழிப்படும் அடிசில் ஆக்குதற்கு வேண்டும். பொருட்களை “நெடியாது அளிமின்” என ஆணையிடுவது ஆயர் மகளிரும் அவற்றை அப்போதே அளிப்பது, அவை கொண்ட கண்ணகி அட்டில் தொழிலை அட்டியின்றித் தொடங்குவது ஆகிய இந்நிகழ்ச்சிகள் விரைந்து நடைபெறுதல் வேண்டும் என்ற உணர்வோடு, இளங்கோவடிகளார் சொற்களை ஆண்டிருக்கும் விரைவு, அடியார்க்கு நல்லார் உரைக்கு ஆதரவு அளிப்பதாக இல்லை. அட்டில்