இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மாதவி தொடர்பாகவே பொருளழித்து
வறுமையுற்றுக் கைப்பொருள் இழந்து நிற்கும் நிலை கோவலனைக் கானல் வரிக்கு முன்பே அலைக்கழிக்கத் தொடங்கிவிட்டதை
மாதவியும் உணர்ந்திருந்தான் என தெ.பொ.மீ. அவர்கள் கூறுவது பொருந்துமா?
"குளிப்பதற்குக் கொள்ளைப் பொன்; அணிவதற்கும் ஆயிரம் ஆயிரம்; அம்மம்ம செலவினை எப்படிக் கணக் கிடுவது?" (பக்கம் : 4) -
- பொழிலாட்டும் நாண்மகிழ் இருக்கையும் பூமவி கானத்துப் புது மன நுகர்வும், நகையாடாயமும், பாணரு டனும், பரத்தருடனும் திளைத்து வருதலும் எல்லாம் பகட்டே ஆம். பகட்டு என்றால் பன ஒட்டந்தானே?” :பக்கம் :3) - -
காமக்களி மகிழ்வு. அபொழிலாட்டு, நாண் மகிழ் இருக்கை, புதுமணம் புகுதல், நகையாடாயத்து நன் மொழி திளைத்தல் என்ற வகையில், பாணரொடும் பரத்தரொடும் திரிவதே மாதவிச் சூழலில் கோவலன் இயல்பாயிருக்கிறது. இதைத் தானே மாதவியும் காண் கிறாள்' (பக்கம் : 52 -
"எதனையும் எதிர்த்துப் போராடும் உறுதி படைத் தது மாதவியின் மனம்; பரத்தை வாழ்வை மறுத்துக் கற்பு வாழ்வை மேற்கொண்டு, தாயையும் எதிர்த்தது