புலவர் கா. கோவிந்தன்
39
அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து
குறங்கு செறிதிரள் குறங்கினில் செறித்து,
பிறங்கிய முத்தரை முப்பத் திருகாழ்
நிறங்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇக்
காமர் கண்டிகை தன்னொடு பின்னிய
தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து,
மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம் செம்பொற் கைவளை
பரியகம் வால்வளை பவழப் பல்வளை
அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து,
வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம்
கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்
வாங்குவில் வயிரத்து மரகதத் தாள் செறி
காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து,
சங்கிலி நுண்தொடர் பூண்ஞாண், புனைவினை
அங்கழுத்து அகவயின் ஆரமொடு அணிந்து,
கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்துஆங்கு,
இந்திர நீலத்து இடையிடை திரண்ட
சந்திர பாணி, தகைபெறு கடிப்பினை
அங்காது அகவயின் அழகுற அணிந்து,
தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி
தொய்யகம், புல்லகம் தொடர்ந்த தலைக்கணி
மையிர் ஒதிக்கு மாண்புற அணிந்து,
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்துப்
பாடமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்”
இவ்வரிகளைக் காட்டியுள்ளார். இவ்வரிகளைச் சான்று. காட்டியதன் மூலம், அவ்வரிகளில் கூறப்பட்டிருக்கும் கால் விரல் மோதிரம் முதல், புல்லகமாம் தலைக்கணி வரையான முப்பதுக்கும் மேற்பட்ட அணி வகைகளில்,