கோவலன் வழக்கமாகக் கண்ணகியின் வீடு சென்று பொருள்களைக் கொணர்ந்து கொடுத்து வந்தான்; அதை மாதவியும் உணர்ந்திருந்தாள் எனல் பொருந்துமா?
“கண்ணகியின் உடன்பாடு பெற்றே, தன்னுடன் வாழ்கிறான் கோவலன் என [மாதவி] கருதினாளோ? யாமறியோம். கண்ணகியின் வீடு சென்று, பொருள்களைக் கோவலன் வழக்கமாகக் கொண்டு வந்து கொண்டிருந்தமையால், அவள் அப்படியும் எண்ணியிருக்கலாம்.” [பக்கம்: 97-98] என எழுதுவதன் மூலம், கோவலன், வழக்கமாகக் கண்ணகி மனைக்குச் சென்று பொருள்களைக் கொண்டு வந்து கொடுப்பதை மாதவியும் உணர்ந்தே இருந்தாள் என மாதவிபால் ஒரு பெருங். குற்றச்சாட்டினைச் சாட்டியுள்ளார் தெ.பொ.மீ. அவர்கள்.
அவர் கூற்றில் உண்மை இருக்கிறதா?
வயந்த மாலை பால் மாலை பெற்று, மாதவி மனை புகுந்தது முதல், வயந்த மாலை கொடுத்த மாதவி கடிதத்தை மறுத்தது வரையான காலத்தில், கோவலன் ஒரு முறையேனும், கண்ணகி வாழும் தன் மனைக்குச் சென்று வந்தான் எனச் சிலப்பதிகாரம் யாண்டும். கூறவில்லை.
மாதவி மாலை வாங்கி, அவள் மனை புகுந்த, கோவலன் செயலை, “விடுதல் அறியா விருப்பினன்