66
சிலம்பொலி
ஆயினன். வடு நீங்கு சிறப்பின் மனைஅகம் மறந்து”. [அரங்கேற்றம்: 174-175) எனக் கூறியுள்ளார் இளங்கோவடிகளார். மாதவியையும், அவள் மனையையும் விட்டுப் பிரிய மாட்டா வேட்கையுடையன் ஆகிவிட்டான் என மாதவி மனையகத்து அவன் நிலை யாது என்பது பற்றிக் கூறியதோடு அமையாது, தன் மனைவியாம் கண்ணகியையும், அவள் வாழும் தன் மனையையும் மறந்தே போயினான் எனக் கண்ணகி மனையகத்து அவன் நிலை யாது என்பதையும் தெளிவாக்கியுள்ளார்: “விடுதல் அறியா விருப்பினன்” என்பதால், கானல்வரி நிகழ்ச்சி வரை, மாதவியின் மனையைக் கோவலன் பிரிந்தறியான் என்பதும், “மனையகம் மறந்தான்” என்பதால், கானல் வரி இறுதியில் மாதவியை வெறுத்துத் தன் மனை புகும் வரை, கோவலன் தன் மனையையும், மனைவியையும் மறந்தே கிடந்தான்; மறந்தும் மனைப்பக்கவன் சென்றிலன் என்பதும் உறுதியாயின.
கண்ணகியைப் பிரிந்து மாதவியோடு வாழ்ந்த காலத்தில், மாதவி மனை தவிர்த்துக் கோவலனைக் காணக் கூடிய இடங்களாகச் சிலப்பதிகாரத்தில் சில இடங்கள் கூறப்பட்டுள்ளன.
கோவலனைத் தென்றலுக்கு உவமையாகக் கொண்டு, கோவலன் போலத் திரியும் தென்றல் எனக் கூற வந்த புலவர், அத்தென்றல் உலா வரும் இடங்களாகக் குறிப்பிட்டவை. ஒன்று, “பூம்பொதி நறுவிரைப் பொழில்”, இரண்டு, “நாள் மகிழ் இருக்கை நாளங்காடி” [இந்திர விழா: 195-196] ஆகக் கோவலன் உலா வரும் இடங்கள், அவனைக் காணக் கூடிய இடங்கள் இவ்விரு இடங்களாம் என்பது கூறாமல் கூறப்பட்டது.
பிள்ளை நகுலம் இறப்பதற்குக் காரணமாகிக் கணவனாம் மாமறையாளனால் கை விடப்பட்டு, வட