பக்கம்:சிலம்பொலி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் கா. கோவிந் தன் 69'."

என்பதை அறிந்திருந்ததினாலேயே, தேவந்தி, "பெறுக! கணவனை' என்றும்,அதுபெற, "ஒருநாள் குண்டம் ஆடிக் கோட்டம் தொழுவாம்' என்றும் யோசனை கூறியுள் வாாள். -

நாள்தோறும் பார்த்திருக்கும் ஒருவரை, எத்துணை நெடுந்தொலைவில் கண்டாலும் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். ஒருவர் எத்துணைதான் நெருக்க மானவராயினும், அவரைப் பல்லாண்டு காலம் கானா திருந்து, ஒரு நாள் திடுமெனக் காண நேர்ந்தால், கண்ணுற்றவுடனே, அவரை அடையாளம் கண்டு ' கொள்வது இயலாது; தன் மனைக்குச் சென்றுள்ளான் கோவலன். அம்மனையில் பணி புரியும் குற்றிளையாள், ! அவனைக் கண்டவுடனேயே அடையாளம் கண்டு கொண்டிலள். காவலன் போலும் எனத் தொடக்கத்தே ஐயுறுகிறாள். சிறிது கழித்தே அவனைக் கண்டு கொள் கிறாள். "காவலன் போலும் கடைத் தலையான் வந்து நம் கோவலன் என்றாள் ஒர் குற்றிளையாள்" |கனாத்திறம் : 65-66) என்ற இ ள ங் கே ( வ டி க ளார். வரிகளையும், 'தூரத்தே பார்த்து ஐயுற்று நம் காவலன் போலும் என்று, அவன் அணுகினவிடத்து ஐயம் தீர்ந்து கோவலன் என்றாள்' என்ற அரும்பத உரை காரர், அடியார்க்கு நல்லார் ஆகிய இருவர் உரை விளக்கத்தையும் காண்க: கோவலன் தன் மனைக்கு." வழக்கமாக வந்து கொண்டிருந்திருந்தால், குற்றிளை' யாளுக்கு அம் மயக்கம் நேர்ந்திருக்காது. அவன் பல் லாண்டு காலம், அம் மனைப் பக்கமே வராதிருந்து விட்டுத் திடுமென வந்து நிற்கவேதான் அவளுக்கு அம் மயக்கம் நேர்ந்தது. -

மகளிர்க்கு மேனி வாடுவது, கணவர் பிரிவால் ஒருவரின் மேனிவாட்டம் காண்பவர் கண்ணை உறுத்து மளவு ஒரே நாளில் திடுமெனப் பெருகிவிடுவதில்லை.பல ாட்கள், பல திங்கள், பல ஆண்டுகளாக அவ்வாட்டம்"

சில-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/75&oldid=560698" இலிருந்து மீள்விக்கப்பட்டது