பக்கம்:சிலம்பொலி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சிலம்பொலி

தைப் பறி கொடுப்பவன் கோவலன்; மாதவியின் ஆடற் கலையால் ஈர்ப்புண்டே, அவன் அவள் உறவினை மேற். கொண்டான் என்பது தெ. பொ. மீ. கருத்தாதல் தெரி .கிறது.

கோவலன் கலையுள்ளம் படைத்தவன்தான்; அதில் ஐயம் இல்லை; யாழை வார்தல், வடித்தல் போல்வன மேற்கொண்டு, மீட்டுதற்கு உரியதாக்கி, இசை யோர்த் துப் பார்த்த மாதவி, அதை மேலும் உறுதி செய்து கொள்ள விரும்பிய நிலையில், ஏவல் முறையில் அல்லா மல், இரக்கும் நிலையில் இருந்து, இசை வாசிக்கும் தாளம் யாதோ அறியேன் எனக் கூறி, யாழை அவள் கை நீட்டி யதும், அவனும் அது வாங்கிக் கானல் வரிப் பாணிகளை மாதவி மனம் மகிழ வாசித்ததும், அவன் இசையறிவிற்கு ஒர் எடுத்துக் காட்டு.

"எட்டு வகையின் இசைக் கரணத்துப்

பட்டவகை தன்செவியின் ஒர்த்து

"ஏவலன்; பின், பாணி யாது?’ எனக்

கோவலன் கை யாழ் நீட்ட, அவனும்

காவிரியை நோக்கினவும், கடற்கானல் வரிப்

- பாணியும் மாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன்"

-கானல் வரி.

அது போலவே, மதுரை செல்லும் இடை வழியில் கோசிகமாணியைக் கண்ணுற்ற பின்னர், துர்க்கையின் போர்க் கோலக் காட்சியைப் பாடியவாறே வந்து எதிர்ப் ட்ட பாணர் கொணர்ந்த செங்கோட்ட யாழ் உறுப்பு *ள, அரும்பாலை எனும் பண்ணிசை எழுவதற்கு ஏற். நிருத்தி அமைத்து, முறைப்படி மீட்டுச் செவிப் புலத்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/78&oldid=560701" இலிருந்து மீள்விக்கப்பட்டது