78
சிலம்பொலி
மையை உணர்வர் என மன இயல்பை உணர்த்தியுள்ளார் திருவள்ளுவர்.
கானல்வரி நிகழ்ச்சி வரை, பிரிவுத் துயர் என்பதையே அறியாது வாழ்ந்தவள் மாதவி. கோவலன் அவளை ஒரு நாள் கூடப் பிரிந்து அறியாப் பேரார்வம் அவள் பால் சொரிந்து கொண்டிருந்தான். விடுதல் அறியா விருப்பினன். அதனால், கோவலன் தன்னுடன் இருந்த காலத்தில், கண்ணகியின் பெருமையினையோ, கணவன் பிரிவால் அவள் உற்ற கடுந்துயரையோ, மாதவி உணர்ந்து கொள்ளவில்லை. உணர வேண்டிய நிலையே, அப்போது அவளுக்கு வாய்க்கவில்லை. அப்போது, அவள் சிந்தையும், செயலும், கோவலனுக்கு ஊடலும், கூடலும் மாறி, மாறி அளித்து அவனை இன்புறுத்துவதிலேயே கழிந்து விட்டது.
தான் பாடிய கானல் வரிப்பாடல் கேட்டுக் கோவலன் பிரிந்து சென்ற அக்கணமே, பிரிவுத் துயர்க் கொடுமையை மாதவி உணர்ந்து கொண்டாள். அந்நிலையே, அவள் உள்ளமும், உடலும் செயலற்றனவாகி விட்டன.
“கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள்புக்கு,
காதலனுடன் அன்றியே மாதவிதன் மனைபுக்காள்”
[கானல்வரி: 52] என தெ.பொ.மீ. அவர்கள் கூறுவது காண்க.
கோவலன் பிரியவே, மாதவி கொடிய துயர்க்கு உள்ளாகி, உடலும், உள்ளமும் வாடி வருந்திக் கிடந்த நிலையைக் கோசிகமாணி, கோவலன் கேட்கக் கூறியிருப்பதும் காண்க.
“கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய
மாமலர் நெடுங்கண் மாதவி போன்று…
வருந்தினை.”
—புறஞ்சேரி : 48-51.