பக்கம்:சிலம்பொலி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் கா. கோவிந்தன் 8篮

கோதைத் தாமம் குழலொடு களைந்து போதித்தானம் புரிந்து அறங்கொள்ளவும்"

-நீர்ப்படை : 103 - 108. என்ற மாடல மறையோன் பாராட்டு காண்க.

" காதலன் தன் வீவும், காதலி நீ பட்டது.ாஉம்

ஏதிலார் தாம் கூறும் ஏச்சுரையும் கேட்டேங்கிப் போதியின் கீழ் மாதவர் முன் புண்ணியதானம்புரிந்த, மாதவி தன் துறவும் கேட்டாயோ, தோழி? மணிமேகலை துறவும் கேட்டாயோ, தோழி?"

. வாழ்த்துக்காதை, இது அடித்தோழி பாராட்டு. மாதவி பிறர் துயர் காணப் பொறாதவள்; அவர் துயர்க்குத் தானே காரணமாகி விட்டது அறிந்த, அக்கணமே தன்னை அழித்துக் கொண்டவள்; தன் மகள் வாழ்வையும் அழித்து விட்டவள் என்ற அடுக்கடுக்கான பெருமைக்குரியவள் என்பது ம்ேலே கூறியவற்றால் தெளி வாகத் தெரிகிறது. அத்தகையாள் கோவலன் தன்னோடு உடன் இருந்த காலத்தில், கோவலன் பிரிவால் கண்ணகி யும் வருந்துவாள் என்பதை ஒரு சிறிதே உணர்ந்திருந் தாலும், கோவலன் தன்னை விடுதல் அறியா விருப்புடை. யனாகத் தன் மனையகத்தே வீழ்ந்து கிடக்க விரும் பினாலும், அவனைக் கண்ணகி மனைக்குத் துரத்தியே இருப்பாள். 3.

ஆக, அக்காலத்தில், கண்ணகியும் பிரிவால் வருந்து வாள் என்பதை அறிந்து கொள்ள மாட்டா நிலையில், மாதவி வீழ்ந்து கிடந்த அக்காலச் சூழ்நிலை குற்ற முடையதேயல்லாது, மாதவி குற்றமுடையாள் அல்லள். ஆகவே, மாதவி மீது, தெ.பொ.மீ. குற்றம் சாட்டுவது முறையாகாது. - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/87&oldid=560710" இலிருந்து மீள்விக்கப்பட்டது