புலவர் கா. கோவிந்தன்
81
கோதைத் தாமம் குழலொடு களைந்து
போதித்தானம் புரிந்து அறங் கொள்ளவும்”
—நீர்ப்படை : 103-108.
என்ற மாடல மறையோன் பாராட்டு காண்க.
“காதலன் தன்வீவும், காதலிநீ பட்டதூஉம்
ஏதிலார் தாம்கூறும் ஏச்சுரையும் கேட்டேங்கிப்
போதியின்கீழ் மாதவர்முன் புண்ணியதானம் புரிந்த,
மாதவிதன் துறவும் கேட்டாயோ, தோழி?
மணிமேகலை துறவும் கேட்டாயோ, தோழி?”
—வாழ்த்துக் காதை
இது அடித் தோழி பாராட்டு.
மாதவி, பிறர் துயர் காணப் பொறாதவள்; அவர் துயர்க்குத் தானே காரணமாகி விட்டது அறிந்த, அக்கணமே தன்னை அழித்துக் கொண்டவள்; தன் மகள் வாழ்வையும் அழித்து விட்டவள் என்ற அடுக்கடுக்கான பெருமைக்குரியவள் என்பது மேலே கூறியவற்றால் தெளிவாகத் தெரிகிறது. அத்தகையாள் கோவலன் தன்னோடு உடன் இருந்த காலத்தில், கோவலன் பிரிவால் கண்ணகியும் வருந்துவாள் என்பதை ஒரு சிறிதே உணர்ந்திருந்தாலும், கோவலன் தன்னை விடுதல் அறியா விருப்புடையனாகத் தன் மனையகத்தே வீழ்ந்து கிடக்க விரும்பினாலும், அவனைக் கண்ணகி மனைக்குத் துரத்தியே இருப்பாள்.
ஆக, அக்காலத்தில், கண்ணகியும் பிரிவால் வருந்துவாள் என்பதை அறிந்து கொள்ள மாட்டா நிலையில், மாதவி வீழ்ந்து கிடந்த அக்காலச் சூழ்நிலை குற்றமுடையதே யல்லாது, மாதவி குற்றமுடையாள் அல்லள். ஆகவே, மாதவி மீது, தெ.பொ.மீ. குற்றம் சாட்டுவது முறையாகாது.