புலவர் கா. கோவிந்தன்
83
“கூடல் மாநகரில் உன்னை விரும்பி விருந்தேற்றுக் கொள்வாரிடத்தை அறிந்து, ஆவன செய்து விட்டுப் பின்னரே திரும்புவாயாக!” என்று கூறித்தான் கௌந்தி அடிகளாரும் விடை கொடுத்து அனுப்பினார்.
“வருந்தாது ஏகி, மன்னவன் கூடல்
—ஊர் காண் : 60-61
ஆனால், மதுரை சென்று திரும்பிய கோவலன் ஆங்கு, “மன்னர் பின்னோர்க்கு என் நிலை உணர்த்தி வருவேன்” எனக் கூறிச் சென்றது போலவோ, “பொருந்துழி அறிந்து வா” எனக் கௌந்தி அடிகளார் ஆணையிட்டது போலவோ, ஏற்றுச் சென்ற பணிகளை முடித்துத் திரும்பினானா என்றால், இல்லை. சென்றவன் ஆங்கு, “வையங்காவலர் மகிழ்தரு வீதி” (145), “எண்ணெண் கலையோர் இருபெரு வீதி” (167), “அங்காடி வீதி” (179), “பயங்கெழு வீதி” (200), “நலங்கிளர் வீதி” (204), “அறுவை வீதி” (207), கூல வீதி (211), “நால் வேறு தெருவு” (212), “ஆவண வீதி” (213), “மன்றமும், கவலையும், மறுகும்” (214) ஆகிய இவற்றையெல்லாம் வறிதே பார்த்து வந்தானே ஒழிய, ஏற்றுச் சென்ற வினை முடித்து வந்தானல்லன், இவற்றைக் கண்டு பெற்ற மகிழ்ச்சியில் கடமையை மறந்து விட்டான். இவற்றையெல்லாம், குறிக்கோள் ஏதும் இல்லாமல், வறிதே வெறித்துப் பார்த்துக் கொண்டே வந்து விட்டான். அதனால்தான், ஆசிரியர் இளங்கோ அடிகளார் “அங்கெல்லாம் சென்று திரும்பினான்” என்னாது “அங்கெல்லாம் திரிந்து திரும்பினான்” என்று கூறியுள்ளார். “மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து” (214) என்ற வரியினைக் காண்க,
பல்வேறு இடங்களுக்கும், குறிக்கோள் இன்றிச் சென்றலையும் கீழோர் செயலைத் திரிதல் என்ற சொல்