பக்கம்:சிலம்பொலி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"மாதவி மனை புகுந்த கோவலன், தன் மனையை அறவே மறந்துவிடவில்லை" எனல் பொருந்துமா?

1. மாமலர் நெடுங்கண் மாதவி மாலை

கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு மணமனை புக்கு மாதவி தன்னொடு அனைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி விடுதல் அறியா விருப்பினன் ஆயினன் வடு நீங்கு சிறப்பின் தன் மனையகம் மறந்து'

என அரங்கேற்றுக் காதையில் (170-1751 கூறியதன் மூலம், கோவலன் மாதவிபால் விடுதல் அறியா விருப்பம் உடைய வனாகி விட்டமையால்,தன் மனையகத்தை அறவேமறந்து விட்டான் எனக் கூறப்பட்டாலும், அவன் தன் மனை வாழ்க்கையை மறந்தவனல்லன் என்பதற்கான அகச் சான்றுகளும் உள்ளன என வாதிடுவாரும் உள்ள ர்ை.

2. பிள்ளை நகுலத்திற்கு அறியாதே கேடு புரிந்து, கணவ. னால் கைவிடப்பட்டு, அப்பழி தீர, அவன் கொடுத்த வட மொழி வாசகம் எழுதிய ஏட்டை வாங்கும் தகுதியுடை யாரைத்தேடத் தொடங்கிய பார்ப்பணி, புகார் நகரத்துப் பீடிகைத் தெருவில் பெருங்குடி வாணிகர் மாட மறுகில் சென்றே மனைதொறும் புகுந்து புகுந்து கேட்டாளாக, அவளை அணுகக் கூவி, அவள் குறை கேட்டு, அவ்வேடு வாக்கி, அவள் பழி தீர்த்தான் ,கோவலன் என்கிறான் கோவலனின் வாழ்க்கை முறைகளையெல்லாம் உணர்ந்த அவன் பார்ப்பன்த் தோழன் மாடல மறையோன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/96&oldid=560719" இலிருந்து மீள்விக்கப்பட்டது