பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

சுந்தர சண்முகனார்


3. குழி - பள்ளம் படுகுழியின்மை - திண்ணியதாதல்.

4. மண் இனிய மணமும் சுவையும் உடையதாதல்.

5. எலும்பு, உமி, பரல், உவர்ப்பு, ஈளை, பொடி - இவைகள் இல்லாதிருத்தல்.

6. ஊர் நடுவே - தேரோடும் தெருவிலே இருத்தல் - முதலியன, அரங்கம் அமைக்க வேண்டிய இடத்திற்கு இருக்க வேண்டிய இயல்புகளாம்.

II அரங்க மேடை:

அரங்க மேடை பின் வருமாறு இருத்தல் வேண்டும். நல்லிலக்கண ஆடவனது பெரு விரலால் 24 கொண்ட அளவுக் கோலால் அளந்த ஏழு கோல் அகலம் - எட்டுகோல் நீளம் - ஒரு கோல் உயரம் உடையதாய் அரங்க மேடை இருத்தல் வேண்டும். போக வர இரண்டு வாயில்கள் இருத்தல் வேண்டும். அளவுக் கோல், பொதிய மலை போன்ற தெய்வ மலையிலிருந்து வெட்டி வந்த மூங்கிலா யிருக்க வேண்டும். கணுவுக்குக் கணு ஒரு சாண் இடைவெளி உள்ளதாயும் இருக்கவேண்டும். அத்தகைய கோலால் அளந்தமைக்க வேண்டும்.

III அரங்க அமைப்பு:

1. மக்கள் வழிபட நால்வகைக் குலப் பூதங்களின் ஒவியங்கள் தீட்டி வைத்திருத்தல்.

2. தூணின் நிழல் விழாவாறு விளக்குகள் அமைத்தல்.

3. இடத் தூணிலையிலே உருவு திரையாக ஒருமுக எழினி அமைத்தல்.

4. இரு வலத் தூணிலை யிடத்து உருவு திரையாக பொரு முக எழினி அமைத்தல்.

5. மேலே கூட்டுத் திரையாகக் கரந்துவரல் எழினி அமைத்தல்.